யாழ்ப்பாணத்தை மிரட்டிய தென்பகுதி பேரூந்து

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தென்பகுதியில் இருந்து வந்த பேரூந்தின் பின்னாலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (7)