வருடாந்த நன்றி செலுத்தும் தினத்தை முன்னிட்டு, தனக்கு வழங்கப்பட்ட ட்ரம்ப்ஸ்ரிக் என அழைக்கப்படும் வான்கோழியை உணவுக்காக கொல்லாது அமெரிக்க ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார்.
நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையன்று ஒரு குடும்ப விழாவாக கொண்டாடப்படும் நன்றி செலுத்தும் தினத்தில், வான்கோழியைப் பயன்படுத்தி பல்வேறு வகை உணவுகளை சமைத்து பரிமாறுவது வழக்கமாகும்.
இம்முறையும், வருடாந்த நன்றி செலுத்தும் தினத்தை வழக்கமாக கொண்டாடிக்கொண்டிருக்கும் போது, தனக்கு வழங்கப்பட்ட ட்ரம்ப்ஸ்ரிக் என அழைக்கப்படும் வான்கோழியை உணவுக்காக கொல்லாது அமெரிக்க ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார்
70 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் 33 ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்த ஹரி எஸ். ட்ரூமன் காலத்தில், நன்றி செலுத்தும் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ட்ரூமன் வான்கோழியை உணவாகப் பயன்படுத்தியிருந்ததாகவும், ஆனால் தான், மிகவும் இனிமையான ஜனாதிபதியாக செயற்பட்டு அதற்கு விடுதலை அளித்துள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அவருக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த பராக் ஒபாமா தனக்கு மேற்படி தினங்களின் போது வழங்கப்பட்ட வான்கோழியை மன்னித்து விடுதலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
பராக் ஒபாமாவால் மன்னிப்பளிக்கப்பட்டு உயிருடன் உள்ள டாட்டர் மற்றும் ரிக் ஆகிய வான்கோழிகளை தான் கொல்ல விரும்பிய போதும் விடுவிக்கப்பட்ட அந்த வான்கோழிகளை, எந்த சூழ்நிலையிலும் கொல்ல முடியாது என தனது சட்டத் தரணிகள் தன்னைத் தடுத்து விட்டதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.
‘வெள்ளை மாளிகைக்கு உலகத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சில பறவைகளும் விஜயம் செய்துள்ளன. அந்த வகையில் இன்று ட்ரம்ப்ஸ்ரிக் வந்துள்ளது’ என ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.