பூமி தட்டையாக உள்ளதை நிரூபிக்க போவதாக கூறி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மைக் ஹீக்ஸ் என்பவர் புதிய ஏவூர்தி (rocket) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த ஏவூர்தியினை, 1800 அடி உயரத்திற்கு செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
800கி.மீ. வேகத்தில் செல்லும் அந்த ஏவூர்தியில், மைக் பயணம் செய்யப்போவதாகவும், மேலே சென்றவுடன் பூமியின் அமைப்பை படம் எடுத்து அது தட்டையாக இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வரப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கும் முன் 2014 ம் ஆண்டு மைக் இது போன்று, ஏவூர்தி ஒன்றை செய்து அதில் பயணம் செய்தார். ஏவூர்தியானது சிறிய உயரத்திற்கு சென்ற பின் கீழே விழுந்தது.

அதன் பின் இரண்டாவது முயற்சியாக வருகின்ற சனிக்கிழமை (25.11.2017) ஏவூர்தியைச் செலுத்தவுள்ளார்.
‘எனக்கு அறிவியலில் நம்பிக்கை இல்லை. எல்லாமே சூத்திரம் (formula) தான். சரியான சூத்திரத்தினைப் பயன்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். நான் கண்டிப்பாக பூமி தட்டையானது என்பதை நிரூபணம் செய்வேன்’ என மைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






