கமல்ஹாசன் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றால், அதற்கு அமைச்சர்கள் ஆதாரத்தை தர வேண்டும் இல்லையெனில், சட்டபூர்வாகமாக சந்திக்கட்டும் அதைவிட்டு விட்டு மிரட்டும் தொணியில் பேசக்கூடாது என கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வருத்தமளிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு கேள்விகளைக் எழுப்பியுள்ளது. திரையுலகம் எந்த நிலையில் உள்ளது என்பதே இவரது தற்கொலை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற முடிவை யாரும் எடுக்கக்கூடாது. இதுபோன்ற பல தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அது யாருக்கும் தெரியாது . நடிகர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். முதலில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏனெனில் வரி செலுத்தியும், பாதுகாப்பில்லாத துறையாக இந்தத் துறை இருக்கிறது. திருட்டு வி.சி.டி-க்களைக் ஒழிக்க வேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தையும், எங்களையும் வந்து அணுகலாம். பத்மாவதி திரைப்படத்தில் நடித்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அதும் ஆளுங்கட்சி சார்ந்தவர்களே இது போன்ற செயலில் ஈடுபவது, நாம் எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அரசு அமைதி காப்பது தவறு.. தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என எண்ணி கமலும் ,ரஜினியும் அரசியலுக்கு வரலாம். கமல் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றால் அதற்கு அமைச்சர்கள் ஆதராத்தைத் தர வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வாகமாக சந்திக்கட்டும் அதைவிட்டு விட்டு மிரட்டும் தொணியில் பேசக்கூடாது” என்றார்.






