திடீர் சுகவீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம இலக்கம் 1 பாடசாலை மாணவர்கள் 42 பேர் திடீர் சுகவீனம் காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

robbery-759_17136

கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே தலைசுற்று மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தரம் 1 தொடக்கம் 5 வரையினால் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவகளில் 41 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த 19 ம் திகதி டயகம பகுதியிலுள்ள ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்ட சிலர் கடந்த இரு நாட்களாக இவ்வாறு நோயில் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.