சட்டவிரோதக் குடியேற்றவாசிகளே பயங்கரவாதத்தைப் பரப்புகின்றனர் – ஆங் சாங் சூச்சி!

உலகளாவிய ரீதியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளே பயங்கரவாதத்தைப் பரப்புவதாக மியன்மாரின் ஆளும் கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகளே பயங்கரவாதத்தைப் பரப்புகின்றனர் - ஆங் சாங் சூச்சி!

மியன்மாரிலுள்ள ரோஹிங்கியா இன சிறுபான்மையின மக்கள் இனச் சுத்திகரிப்பு செய்வதற்கு ஆங் சான் சூச்சி ஆதரவு வழங்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறித்து உலகளாவிய கவனம் திரும்புள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆசிய வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் தலைநகர் நே பீ டோவில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களைக் கூறியுள்ளார்.

மியன்மார் உள்ளிட்ட உலக  நாடுகள் மோதல் மற்றும் ஸ்தீரமற்ற நிலைமையை எதிர்நோக்கியுள்ளதுடன், நாட்டின் அபிவிருத்தியும் இதனால் பாதிக்கப்படுவதாக ஆங் சாங் சூச்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமாதானம் இல்லாமல் நீடித்த முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஏற்படாது எனவும் மியன்மாரின் ஆளும் கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.