காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஒரு சில மணித்தியாலங்களில் உயிரிழந்த சம்பமானது, வைத்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது, யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடா்பில் தொியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை (16.11.2017) பெண் ஒருவருக்கு, திடீர் வாந்தியுடன் கூடிய காய்ச்சல் இருந்தமையால், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ள காரணத்தால் நேற்றைய தினம் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில், சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலிப் பகுதியினைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான, இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம்
எனும் 55 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.
குறித்த பெண், உயிரிழந்தமைக்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.