முகாபே முதல் தட­வை­யாக பொது வைபவத்தில் பங்­கேற்பு!

இரா­ணு­வத்தால் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சிம்­பாப்வே  ஜனா­தி­பதி முகாபே முதல் தட­வை­யாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை பொது இடத்தில் தோன்­றி­யுள்ளார். அவர் தலை­நகர் ஹரா­ரேயில் இடம்­பெற்ற பட்­ட­ம­ளிப்பு வைப­வத்தில் பெரும் பாது­காப்­புக்கு மத்­தியில் கலந்து கொண்டார்.

சிம்­பாப்­வேயில் நீண்ட கால­மாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த அவ­ருக்கு  பதவி வில­கு­வ­தற்கு  கடும் அழுத்தம். கொடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், அவர்  பத­வியைத் துறக்க மறுப்புத் தெரி­வித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

_98780629_dd3cb453-acb5-4f69-b59f-2a2b3f6c8cb0அந்­நாட்டின் கட்­டுப்­பாட்டை இரா­ணுவம் கடந்த புதன்­கி­ழமை கைப்­பற்­றியதைய­டுத்து ரொபேர்ட் முகாபே ஹராரே நக­ரி­லுள்ள 5 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான அவ­ரது  வீட்டில் இரா­ணு­வத்தால்  வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை தென் ஆபி­ரிக்க  அபி­வி­ருத்தி சபையைச் சேர்ந்த இரு தூது­வர்­களும்  இரா­ணுவத் தலை­வரும் 93 வய­தான முகா­பே­யுடன் சந்­திப்பை மேற்­கொண்­டனர்.

இதன்­போது அவ­ருக்கு பதவி வில­கு­வ­தற்கு கடும் அழுத்தம் கொடுக்­கப்­பட்­ட­தா­கவும் ஆனால் முகாபே பதவி வில­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

முகா­பே­யு­ட­னான மேற்­படி பேச்­சு­வார்த்­தை­யா­னது  அவ­ருக்கு பல ஆண்டு கால­மாக பழக்­க­மான ரோமன் கத்­தோ­லிக்க மத­கு­ரு­வான அருட்­தந்தை பிடெலிஸ் முகோ­னோ­ரியின் மத்­தி­யஸ்­தத்தில் இடம்­பெற்­றது.

முகா­பே­யுடன்  அந்த வீட்டில் அவ­ரது மனைவி கிரேஸும் இருந்­துள்ளார்.

இந்த சந்­திப்­பின்­போது உரை­யா­டப்­பட்ட விட­யங்கள் குறித்து உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை எதுவும் வெளி­யி­டப்­ப­டாத போதும், முகாபே பதவி வில­கு­வ­தற்கு இணங்க மறுத்­தி­ருந்­த­தாக அர­சாங்க தரப்பு வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

முகாபே  உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்­பது மக்­களின் விருப்­ப­மா­க­வுள்­ளது என எதிர்க்­கட்சித் தலைவர் மோர்கன் தஸ்­வான்­கிரே தெரி­வித்­துள்ளார்.

முகாபே  தனக்குப் பின்னர் தனது மனைவி கிரேஸ் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­பதை உறுதி செய்யும் முக­மாக உப ஜனா­தி­பதி எமர்ஸன் மனான்­க­வாவை  கடந்த வாரம் பணி நீக்கம் செய்­த­த­தை­ய­டுத்து,  இரா­ணு­வ­மா­னது அந்­நாட்டின் கட்­டுப்­பாட்டைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

எனினும் மேற்­படி ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்கை சதிப்­பு­ரட்­சி­யொன்று அல்ல என அந்­நாட்டு இரா­ணுவம்  வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  இந்­நி­லையில் அந்­நாட்டு இரா­ணுவம் தனது  ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கையை  நியா­யப்­ப­டுத்தும் வகையில் ரொபேர்ட் முகா­பேக்கு பதவி விலகுவதற்கு அழுத்தம் கொடுக்

கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

அந்நாட்டில் வெள்ளையின சிறுபான்மையினரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதற் கொண்டு ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் ஆட்சி

அதிகாரத்தில் இருந்து வருகிறார்.