தமிழகத்தின் ஒற்றுமையை உலகிற்கு புரியவைத்தது கடந்த வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தான். இந்த போராட்டம் ஒரு இடத்தில் மட்டும் நடக்கவில்லை தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடந்தது. இந்த போராட்டத்தின் போது தமிழக மக்கள் எண்ணத்தில் காளைகளும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இலக்காய் இருந்தது. அந்த வகையில் பெண்களும் இந்த போராட்டத்தில் இரவும் பகலுமாய் கலந்து கொண்டனர்.
மேலும், சில நடிகர்களும் இந்த போராட்டத்தின் பொது கலந்துகொண்டனர். அந்த வகையில், கலந்துகொண்ட அந்த நடிகர்களை ஏதோ விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் அழைத்துள்ளாராம். இதற்காக சில நடிகை நடிகர்களுக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் பொது லாரென்ஸ், ஆர. ஜே. பாலாஜி, விஜய், நயன்தாரா, சிம்பு போன்ற பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.