சசிகலா குடும்பத்தை குறிவைத்து தமிழகத்தில் நடைபெற்ற இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோட்டில் பேருந்து நிலையத்தில் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் இருந்து பணம் பல லட்சங்களில் இருந்து கோடியை தொடலாம் என்பதால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து பணத்தை ஒப்படைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது சசிகலா குடும்பத்தை குறி வைத்து வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருவதால் இந்த ரெய்டில் இருந்து தப்பிக்க ஒரு கும்பல் இப்படி பணத்தை பல இடங்களில் வீசிச்சென்றுவிட்டு போயிருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது.






