சகோதரி கொலை! சகோதரர் தற்கொலை!

தனது சகோதரியை கொலை செய்த சகோதரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மாரவில பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் 57 வயதான தயாவதி மற்றும் 49 வயதுடைய ஜாசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வீட்டுப்பிரச்சினை காரணமாக தனது சகோதரியை கொலை செய்துவிட்டு, குறித்த நபர் வீட்டின் முன்னிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG_1070