நாளை வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் நேற்று விபத்தில் பலி!

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

Capturedgxdஇந்த விபத்து நேற்று (28) பிற்பகல் வவுணதீவு -ஆயித்தியமலை பிரதான வீதியில், பாலக்காடு சந்தியிலே இடம்பெற்றுள்ளது.

அதி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது வேகத்தைக் கட்டுப்படுத்தமுடியாமல் வாய்க்கால் ஒன்றினூடாகப் பாய்ந்து மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.

இளைஞர்கள் இருவரையும் வவுணதீவு பொலிஸார் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். என்றபோதும், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் புதியகாத்தான்குடி 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கே.ஆர்.எம்.ஹாரஸ் (23) எனவும் படுகாயமடைந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த முகமட் சியாம் (23)எனவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் நாளை (30) மலேசியா செல்லவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.