மெர்சல் படத்திற்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.!

மெர்சல் படத்திற்கு தடை கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.!

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த சரக்கு சேவை வரி, ‘டிஜிட்டல்’ இந்தியா திட்டம் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து இருப்பதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், மெர்சல் படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார்.

மெர்சல் படத்திற்கு தடை கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.!

இன்று விசாரணைக்கு வந்துள்ள வழக்கினை விசாரித்துவருகிற நீதிபதிகள் “மெர்சல் திரைப்படத்தில் என்ன தவறு உள்ளது எனவும், இந்தியா முழுக்க ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக குழந்தைகள் எத்துனை இறக்கின்றன என தெரியுமா உங்களுக்கு” என மனுதாரரை நோக்கி கேள்வியெழுப்பினர்.

“பொதுநலனில் அக்கறையிருந்தால், மது குடிப்பது போன்ற காட்சிகளை தடை செய்திடக் கோரி வழக்கு தொடரலாமே” எனவும் தெரிவித்துள்னர். இறுதியாக, மெர்சல் படத்திற்கு வழங்கப்பட தணிக்கை சான்றிதழை ரத்து செய்திட கோரிய இவ்வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.