ரயில் முன் பாய்ந்து இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை.!

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு மகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு இலக்கியா, ஸ்ரீஜா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள். இந்த நிலையில், இன்று காலை 7.30 மணி அளவில் சரஸ்வதி தனது இரண்டு மகளுடன் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவத்தால் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள், ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாகவே சரஸ்வதி தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

59f175b8c8d12-IBCTAMIL