மகாராஷ்டிராவில் விபரீதம்! லாரி கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் பலி!

சாங்கிலி: மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். கர்நாடகா மாநிலம் விஜாபூர் பகுதியில் இருந்து லாரி ஒன்று டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தது. லாரியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சென்றனர். மேற்கு மகாராஷ்டிரா மாவட்டம் டாஸ்கான் நகர் அருகேயுள்ள மானேராஜூரி பகுதியில் நேற்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, வளைவில் திரும்ப முயன்றபோது போதுமான வெளிச்சம் இல்லாததால் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், லாரியில் இருந்த தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் காயம் அடைந்தனர்.

Captureaeswhhஇவர்களில் 11 பேர் மிராஜ்ஜில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்கள் டாஸ்கான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இறந்தவர்களில் 6 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தெரிவித்தனர். லாரி கவிழ்ந்து 10 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.