பாஜக முன்னாள் மாநில தலைவர் எஸ்.பி.கிருபாநிதி(90) உடல்நலக் குறைவால் கடலூரில் காலமானார்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக டாக்டர் எஸ்.பி. கிருபாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் 1989ம் ஆண்டில் பாரதீய ஜனதாகட்சியில் சேர்ந்தார்.
முதலில் கடலூர் மாவட்டத் தலைவராக இருந்த இவர் பின்னர் மாநில அளவில் துணைத் தலைவரானார்.
மருத்துவரான இவர் எம்.எஸ்., எப்.ஐ.சி.எஸ். பட்டங்கள் பெற்றவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகதாழ்த்தப்பட்ட ஒருவர் நியமிக்கப்பட்டது அப்போது அதுவே முதல் முறையாகும்.
பதவியேற்ற சில வருடங்களிலேயே கிருபாநிதிக்கும் மாநிலச் செயலாளராக இருந்து இல.கணேசனுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதியை சாதிப் பெயரைச் சொல்லி கணேசன் திட்டியதாகவும், தேசியக் குழுக் கூட்டத்தில் வைத்து தாக்கியதாகவும் கூறப்பட்டது.
இதனால் மனம் வெறுத்துப் போன கிருபாநிதி அப்போது முதல் கட்சிப் பணிகளில் இருந்து தன்னை முழுமையாக ஒதுக்கிக் கொண்டார்.
தனது அரசியல் வாழ்வில் இவ்வளவு துயரங்களை சந்தித்து இன்று பிரபலத்தை தேடிக்கொள்ளாமல் தனது உயிர் வாழ்வை நீத்துள்ளார்.