நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தினில் தேனாண்டாள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு நாளை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கையில், இந்த திரைப்படம் தணிக்கைத்துறையின் தணிக்கைக்கு செல்லவில்லை என பல செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிற சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கடம்பூர் ராஜீயையும் இன்று சந்தித்துள்ளார் நடிகர் விஜய்.
மெர்சல் திரைப்படம் வெளியாவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவே நடிகர் விஜய், முதல்வரை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரது இல்லத்தில் அவரை சந்தித்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.