தமிழகம் கண்ட அரசியல் ஆளுமைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளில் ஒருவர். ஆண்டாண்டு காலமாக சாதியின் காரணமாகவும், மதத்தின் காரணமாகவும் ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களின் உரிமைக்குரலாய் வெடித்துக்கிளம்பியவர் அவர். ஒடுக்கப்பட்ட ஏழை – எளிய மக்களின் மீது நடத்தப்படுகிற சாதிய வன்கொடுமைகள் மீது சவுக்கெடுத்து சுழற்றியவர். அந்த மக்களுக்காக தன் அரசு பணியை துறந்தவர். திருமணம் செய்துகொள்ள மறுத்து தொடர்ச்சியாக களமாடி வருபவர்.
ஈழ விடுதலை, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி களமாடி வரும் திருமா தீவிர ஈழ ஆதரவாளர்களுள் ஒருவர். கடந்த 2002ல் ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார், மேலும் தமிழ்த்தேசிய தலைவரின் அன்பினை பெற்றவர்.
அப்படியான திருமா, ஈழ மக்களின் பெரும் அன்புக்கும் உரியவர். அவர் கலந்துகொள்ளாமல் தனது திருமணத்தில் உணவருந்த மாட்டேன் என தெரிவித்து காத்திருந்தார். இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் உதவி இயக்குனர் – நிரோஜன்.
இவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி – சென்னை எழும்பூரில் 13-10-2017ல் நடைப்பெற்றது. நெடுமாறன் உள்ளிட்ட பல ஈழ ஆதரவாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், திருமாவளவன் கலந்துகொள்ள சற்று தாமதமாகையில், அனைவரும் உணவருந்த அழைத்தும், என் அன்பினுக்கு உரிய திருமா அண்ணன் வருவதாக தெரிவித்திருக்கிறார். அவர் வந்ததன் பின்னே சந்தித்துவிட்டு வருகிறேன் என தெரிவித்ததுடன் அப்படியே செய்தார்.
ஈழ மணமகன் நிரோஜனின் இந்த செயல் அங்கிருந்தவர்களை மிகுந்த நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.