மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா இளைஞன்..!

மலேசியாவின் ஜலான் கோம்பக் லமா பகுதியில் ஸ்ரீலங்கா இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

59ddbe281a8a2-IBCTAMIL

கடந்த திங்கட்கிழமை கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு கால்கள் மற்றும் தலை சாக்கினால் மூடப்பட்ட நிலையில் மலைப்பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டு சில மணித்தியாலத்தில் 26 மற்றும் 51 வயதுடைய இருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அட்டை வைத்திருக்கும் 32 வயதான ஸ்ரீலங்கா பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடலில் குத்தப்பட்டிருந்த பச்சையினை வைத்து, அவரது மலேசிய மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

15 மீற்றர் உயரத்திலிருந்து இந்த நபரின் சடலம் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் கடுமையான காயம் காணப்பட்டுள்ளதாகவும், கனமான பொருள் ஒன்றினால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.