வழுக்கைத் தலையை மறைத்து போலி தலைமுடியை மாட்டியிருந்த மணமகன் ஒருவர் பெண் வீட்டாரால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
இதனால் குறித்த மணமகனுக்கும் மணமகளுக்கும் நிச்சயமாகியிருந்த திருமணம் பாதியில் நின்றுபோனது.
அம்பாறை மா ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் இரு வீட்டாருக்குமிடையில் சற்றுக் குழப்ப நிலை காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, குறித்த திருமணப் பேச்சுக்களை மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சிங்களக் கலாசாரத்தின்படி மணமகன் மணமகள் வீட்டாரின் காலில் விழுந்து வணங்குவதற்காக கீழே குனிந்துள்ளார். அதன்போது அவரது போலித் தலைமுடி வழுக்கையிலிருந்து வழுக்கி விழுந்துள்ளது.
இதனைக் கண்ணுற்ற மணமகள் வீட்டார் அதிர்ச்சியும் எரிச்சலும் அடைந்ததோடு குறித்த வழுக்கைத் தலை மணமகணை வேண்டாமென்று நிராகரித்து கல்யாணப் பேச்சுக்களை அத்துடன் நிறுத்திக்கொண்டனர். இதன்போது இருவீட்டாருக்குமிடையில் சற்றுக் குழப்ப நிலை காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.