சசிகலா விடிய, விடிய தன் உறவினர்களுடன் அவசர ஆலோசனை!

சசிகலா இரவு முழுவதும் தன்னுடைய உறவினர்களிடம் குடும்ப பிரச்னைகள் பற்றியும், பினாமி சொத்துகளை யார் நிர்வகிப்பது  பற்றியும், அவர் அவசர ஆலோசனை நடத்தியதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

sasikala346-02-1483359488

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவிற்கு தான் சொத்துக்கள் பட்டியலும், யார் யார் எதை நிர்வகித்து வருகிறார்கள் என்பது பற்றிய முழு விவரமும் தெரியும் என்பது குறிபிடதக்கது

ஆனால், தண்டனை பெற்று சசிகலா சிறை சென்ற பிறகு பணம் கொடுத்தவர்களும், வாங்கியவர்களும் கடும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டுள்ளனர்..

இந்நிலையில் நேற்றைய தினம் சசிகலா தன்னுடைய உறவினர்கள் ஜெய் ஆனந்த், விவேக், தினகரன் மற்றும் அவருடைய மனைவி அனுராதா, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் சொத்துக்களை நிர்வகிப்பது குறித்த பலத்த மீட்டிங் போட்டுள்ளார்

இரவு 10 மணியளவில் இந்த மீட்டிங்கை ஆரம்பித்த சசிகலா   விடிய, விடிய அவர்களுடன் ஆலோசனையை நடத்தியுள்ளனர்.

பரோல் முடிந்து சசிகலா சிறை சென்ற பிறகு யார் யார் பணத்தை வசூலிக்க வேண்டும், சொத்துகளை யார் யார் நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் அப்போது பேசியதாக தகவல்  வந்துள்ளது.

இந்த மீட்டிங் அடிப்படையில் சசிகலா மீண்டும் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, சொத்துக்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்..