ஐ.எஸ் தீவிரவாதிகளின் பதில் என்ன தெரியுமா?

இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும், மீடியா மையங்கள் உட்பட எதிரிகள் அனைவரையும் எரித்து கொல்லுங்கள், என, பயங்கரவாதிகளுக்கு, ஐ.எஸ்., தலைவன், அல் பாக்தாதி உத்தரவிட்டுள்ளான்.

மேற்காசிய நாடான, ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது.
ஈராக்கில், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்து இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன.

ஈராக்கின் முக்கிய பகுதியான மொசூல் நகரம், சமீபத்தில் மீட்கப்பட்டது.

images (5)

அப்போது நடந்த சண்டையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், இதை குர்த் மக்கள் படையும், அமெரிக்காவும் மறுத்தன. அவன், சிரியாவின் ரக்கா பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை, அல் பாக்தாதி, ஒரு முறை மட்டுமே, பகிரங்கமாக வெளியில் வந்துள்ளான்.

இந்நிலையில், ஐ.எஸ்., சமூக வலைதளங்களில், அல் பாக்தாதியின் பேச்சு பதிவான ஓடியோ, சி.டி. ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அவன் கூறியிருப்பதாவது,ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களான நீங்கள் தான், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள். இஸ்லாத்தை காப்பாற்றும் வீரர்கள். தோல்வியை கண்டு துவள வேண்டாம்.

உங்கள் தாக்குதலை தீவிரப்படுத்துங்கள். போர்க்களத்தில், நம்பிக்கையுடன் களமிறங்குங்கள்.

இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும் பத்திரிகைகள், டிவி சேனல்கள் போன்ற மீடியா மையங்கள் உட்பட, நம் எதிரிகளை எரித்து கொல்லுங்கள்.

மொசூலில் நம் வெற்றிக் கொடி மீண்டும் பறக்கும். இஸ்லாமிய மைந்தர்கள், அல்லாவுக்காக தங்கள் உயிரையும் உடலையும் தொடர்ந்து தியாகம் செய்வார்கள். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.