பார்வையற்றோரையும் பார்க்க வைக்கும் புதிய தொழில் நுட்பம்

செகண்ட் சைட் எனப்படும் நிறுவனம் பயோனிக் ஐ எனப்படும் புதிய பார்வையற்றோருக்கான தொழில் நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

eyetest

ஒரியன் என்ற இந்த சாதனத்தின் ஊடாக பார்வையற்றோர் வெளிச்சம் மற்றும் இருளினையும் உணர முடியும் எனத் தெரிவிக்கப்படுவதோடு, சில எழுத்துக்களையும் வாசிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சாதனமானது மனித மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வெளிப்புற காட்சிகளை உள்வாங்கி தகவல்களை மூளைக்கு அனுப்புவதனால் அருகில் உள்ள பொருற்களை பார்வையற்றோர் பார்ப்பதற்கு உதவி செய்கின்றது.

எனினும் இந்த இந்த சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் மனித மூளையுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள குறித்த சாதனமானது சுமார் 125000 அமெரிக்க டொலர்கள் என்ற அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அதிகமானோரினால் கொள்வனவு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.