பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி களத்தில் சினேகன், ஆரவ், கணேஷ் மற்றும் ஹரீஷ் உள்ளனர்.

இறுதி போட்டி இன்றும், நாளையும் நடக்க உள்ளது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

2391_biggbosst5_1812

இறுதி போட்டியில் பல பிரபல திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஓவியாவும் கலந்து கொள்ள உள்ளார். பிக்பாசில் இருந்து வெளியேறிய மற்ற போட்டியாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இறுதியில் வெல்லபோவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை சினேகனும், ஆரவும் சமநிலையில் வாக்குகள் கிடைத்து வந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

ஒரு தேர்தல் களத்தில் வாக்குகள் விழுவதை போல பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

அதனால் கணிக்க முடியாத அளவில் உள்ளது. இறுதி போட்டியில்தான் வெற்றியாளரை அறிவிக் உள்ளனர். இது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.