உலகின், மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா

உலகின், மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா இருப்பது, துபாயில் தான். அங்குள்ள, சூரிய பூங்காவின் மின் உற்பத்தித் திறனை 5,000 மெகாவாட்டாக உயர்த்த, துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (3)

இதற்கென, சமீபத்தில், 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கூட்டவும், 853 அடி உயர, சூரிய ஒளி வாங்கி கோபுரத்தை கட்டவும், துபாய் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவே அங்கு 23 லட்சம் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு, 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய திட்டத்தின்படி சூரிய ஒளியை லென்சுகள்(lense) மூலம் பிரதிபலித்து, ஒரு கோபுரத்தின் மீது குவியப்படுத்த உள்ளனர்.

கோபுரத்தில் படும் அதிக வெப்பத்தைக் கொண்டு ஒரு திரவத்தை ஆவியாக்கவும் அந்த ஆவியின் உந்து விசையில் இயந்திரங்களை இயக்கி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில், மின் உற்பத்திக்கு பெட்ரோலிய பொருட்களின் பயனை வெகுவாகக் குறைக்கவம் துபாய் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு இந்த சூரிய மின் ஒளி தொழில்நுட்ப முயற்சிகள் வெகுவாக உதவும் என அவ்வரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.