ஹிந்தி திணிப்பிற்கு தந்திரமாக பதில் கூறிய சுந்தர் பிச்சை..!!

வட இந்தியர்களின் கர்வத்தை தவிடுபொடியாக்கிய தமிழர்..1,265 கோடி சம்பளம் வாங்கும் முதல் இந்தியர்!

sundarindia_16118

ஹிந்தி தெரியாது, ஆனால் 1265 கோடி சம்பளம் வாங்கி, ஹிந்தி முக்கியம் என்று கூறும் மத்திய அரசுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார் ஒரு தமிழன்.

இன்று யாராவது ஒரு லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கினால் வாயை பிளந்து பார்ப்போம்.

ஆனால், ஒருவர் ஆண்டுக்கு 1265 கோடி சம்பளம் வாங்குகிறார். அதுவும் அவர் தமிழன் என்பது தான் முக்கியமான ஒன்று.

அவரின் பெயர் தான் சுந்தர் பிச்சை. அவரது அப்பா ரகுநாத பிச்சை, அம்மா லட்சுமி. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர், படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.

அதன்பின்னர் கோரக்பூர் ஐ.ஐ.டியில் உயர் படிப்பை முடித்து கடந்த 2004-ம் ஆண்டு தான் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இவரது திறமையை பார்த்த கூகுள் நிறுவனம், சி.இ.ஓ. பதவியை வழங்கி சிறப்பித்தது.

கூகுள் மற்றும் யூடியூப் போன்றவற்றில் எப்படி எல்லாம் விளம்பரம் செய்து வருமானத்தை பெருக்கலாம் என்று புதிய ஐடியாக்களை கொடுத்து, நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்தினார்.

அதனால் அவரது சம்பளத்தை உயர்த்தி கொடுத்தது கூகுள் நிறுவனம். கடந்த 2015-ல் அவரது சொத்து மதிப்பு 4150 கோடி ரூபாயாக இருந்தது.

அதன்பிறகு 2016-ம் ஆண்டு அவருக்கு ஆண்டு சம்பளமாக 1265 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் வழங்கியது.

இப்படிப்பட்ட மிகப்பெரிய இடத்தில் இருக்கும் சுந்தர் பிச்சை, அவர் படித்த கோரக்பூர் ஐ.ஐ.டிக்கு சென்று உரையாற்றிய போது, அவரிடம் மாணவர்கள் ஹிந்தியில் கேள்வி கேட்டுள்ளனர்.

அப்போது, தனக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த இரண்டு மொழிகளில் கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அங்குள்ள மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதன் மூலம், ஹிந்தி தேசிய மொழி என்று பிரச்சாரம் செய்யும் சிலருக்கு அவர் சாட்டையடி கொடுத்துள்ளார்.