சத்துரிக்காவின் அரசியல் பிரவேசம் பற்றிய முடிவு ?

என்னைப் பொருத்தமட்டில் அரசியல் என்பது மக்களுக்கு செய்யும் சேவை என்பதாகும் என ஜனாதிபதியின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (4)

சத்துரிக்கா சிறிசேனவினால் எழுதப்பட்ட “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உரையாற்றிய சத்துரிக்கா, நான் முன்னெடுக்கும் செயற்பாடுகளைப்பார்த்து பலர் என்னிடம் கேட்பார்கள் “சத்துரிக்கா நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என, இதற்கு நான் கூறும் பதில் ஒன்றுதான்.

நான் பார்க்கும் அரசியல், நான் நேசிக்கும் அரசியல் கட்சியில் இல்லை, நாடாளுமன்றத்தில் போட்டியிடுவதில் இல்லை. மக்கள் நலனுக்காக என்னால் செய்யப்படும் சேவைகளையே நான் அரசியலாக பார்க்கின்றேன்.

என்னால் முடிந்த வரைக்கும் இந்த நாட்டு மக்களுக்கு சேவைகளை செய்வேன். என தெரிவித்துள்ளார்.