இலங்கை வான் படை முகாமில் நடந்த அமளி; அனைவரும் உடன் வெளியேற்றம்!

ஸ்ரீலங்காவின் வான்படை பயிற்சி முகாம் ஒன்றில் மர்மமான காய்ச்சல் ஒன்று பரவிவருவதால் அந்த முகாமிலிருந்த படையினர் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

59bbacf745b65-IBCTAMIL

பதுளை மாவட்டம் தியத்தலாவ விமானப்படை பயிற்சி முகாமிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மர்மக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள விமானப்படையினர் சிலர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படை முகாமின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலவகையான உண்ணிகளினால் ஏற்பட்ட காய்ச்சலாக இருக்கலாம் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நோய் பரவுவது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனாலும் இது குறித்து மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் உதவி பெறப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.