போரில் புலிகளும் மாண்டனர். இராணுவத்தினரும் மாண்டனர். அதற்காக இராணுவத்தினருக்கு எதிராகப் பன்னாட்டுச் சமூகம் நடவடிக்கை எடுப்பதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
அந்தக் கட்சியின் மையக் குழு உறுப்பினரும், அமைச்சருமான மகிந்த அமரவீர மேலும் தெரிவித்ததாவது:
நாட்டுக்காக அர்ப்பணித்த இராணுவத்தைப் பாதுகாக்கும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டு அரசு ஆட்சியில் உள்ளவரை நாடு இரண்டாகப் பிளவுபட அனுமதிக்கப்படமாட்டாது.
போரில் புலிகளும் மாண்டனர். இராணுவத்தினரும் மாண்டனர். போரின் தன்மை அதுதான். அதற்காக இராணுவத்தினருக்கு எதிராகப் பன்னாட்டுச் சமூகம் நடவடிக்கை எடுப்பதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்.
போர் நடைபெற்ற காலப் பகுதியில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி எவரேனும் ஆட்கடத்தல் மற்றும் கொலைகளைச் செய்திருந்தால் அவர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையின் இறைமைக்கு உட்பட்டதாகவே அந்த நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.