புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி பற்றி ஜனாதிபதி அறிந்த தகவல் என்ன ?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்து வைத்துள்ளார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (3)

அத்துடன், இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ்குமாரை விடுவிக்க பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் யார்? மற்றும் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி அறிந்துவைத்துள்ளார்.

இந்நிலையில், சுவிஸ் குமாரை விடுவிக்கப்பட்டதற்கு துணையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ்மா பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

வித்தியா படுகொலை சம்பவத்தில் பாரிய மர்மம் இருக்கின்றது. இது குறித்த விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறும் என உறுதியாக கூறமுடியாது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நேர்மையான பொலிஸ் அத்தியட்சகர். அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அவரே இருக்கின்றார்.

இந்நிலையில், அந்த பதவிக்கு அவரை நியமிக்கமால் இருப்பதற்காகவே அவர் மீது திட்டமிட்டு சந்தேகத்தை ஏற்படுத்தி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களமும், சட்டமா அதிபர் திணைக்களமும் தடையாக இருக்கின்றது.

இந்நிலையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சேவைகாலத்தில் அவரது நேர்மைத்தன்மையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்கு அவருக்கு சந்தரப்பம் வழங்க வேண்டும். எவ்வாறாயினும், சுவிஸ்குமாரை விடுவிக்க பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.

அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்