இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த டி சில்வா

இடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

D3S6560x-780x520

இப்பதவியிலிருந்த சனத் ஜயசூரிய பொறுப்பிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்தே, அரவிந்த டி சில்வா எதிர்வரும் 3 மாத காலத்துக்கு அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் இலங்கை அணியின் வீரர் ரொஷான் மஹானாமவும் இப்பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னரும் தெரிவுக் குழுவின் தலைமைப் பதவியை அரவிந்த டி சில்வா வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.