15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள 18 வயதுடைய இளைஞர் ஒருவர், மொனராகலை காவற்துறையினால் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞர், தனது காதலியான சிறுமியை கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனது தங்குமிடத்திற்கு அழைத்து, இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
மொனராகலை பிரதேசத்தினை சேர்ந்த குறித்த சிறுமி, ஹம்பாந்தொடை பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய சந்தேக நபரான இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது காதலனை சந்திப்பதற்கு சிறுமி வந்துள்ள போது, சிறுமியை திருமணம் செய்வதாக உறுதியளித்து, சந்தேக நபரான இளைஞர் தான் தங்குமிடத்திற்கு அழைத்து சென்று இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த இளைஞர், தங்குமிடத்திற்கு அழைத்து நாட்கள் சிறுமியை தன்னுடன் வைத்து கொண்டு பல முறை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மீண்டும் சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்
இதனிடையே, சந்தேக நபரான இளைஞரை மொனராகலை காவற்துறை கைது செய்து இளைஞர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி மொனராகாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இளைஞர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.