ஓவியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடுகள்!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை சுயவிருப்பத்தின் பேரில் ஓவியா வெளியேறி விட்டார்.

smxdk

தற்போது வீட்டில் இருக்கும் ஓவியாவை சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆரவுடான காதல் தோல்வி விரக்தியில் இருக்கும் ஓவியாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் ஓவியாவிற்கு ஆறுதலாக இருக்க ஒரு ஆண் துணை தேவை, இதனை உணர்ந்தே அவரது உறவினர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர், அவருக்காக மாப்பிள்ளையை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர்.

இந்த விடயத்தை அறிந்த பல தொழிலதிபர்கள், பணக்கார வீட்டு இளைஞர்கள் ஓவியாவை திருமணம் செய்து கொள்ள அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மேலும், முன்பை விட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த திருமணத்தை நடத்தி முடித்து விட உறவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா செல்லாமல் இருந்தால், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் திருமணம் நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு கூட ஓவியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள ஓவியா மன்னிக்கவும் எனக்கு இதுல எந்த விருப்பமும் இல்லை. இருந்தாலும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது