சவூதி அரேபியாவிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை இலங்கைக்கு கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனது ஆடைகளுக்குள்ளும் கைப்பையினுள் வைத்தும் சுமார் 225 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 1,275,400 ரூபாவாகும் என சுங்கப்பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுங்க அதிகாரி துமிந்த வீரக்கொடி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.