விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்ட நிலையில்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகு ஒன்று எரித்து அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

v

இந்த படகு இறுதியுத்தத்தின் போது அழிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் அணியினர் இது போன்ற படகுகளில் சென்று இலங்கை கடற்படையினரின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்து தமது காட்டுப்பாட்டு பகுதியை பலப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படகுகளை இராணுவத்தினர் காட்சிப்படுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், மனித நடமாட்டம் அற்ற பகுதியான இப்பகுதியில் குறித்த படகு எரிந்த நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.