அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் மிகவும் நெருங்கிய நண்பரான Tony Schwartz தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்னும் சில வாரங்களில் டொனால்ட் ட்ரம்ப் பதவி விலகவுள்ளதாக Tony Schwartz தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில், இந்த டுவிட்டர் பதிவு அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் குறித்து Tony Schwartz முழுமையாக அறிந்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.