யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு

வடக்கின் பல பாகங்களில் மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் சிறிது நேரத்திற்குப் பின்னர், இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கரையோரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை அவதான மையம் பொதுமக்களிடம் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.