முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகிய போதிலும் அவருக்கு அமைச்சருக்கான சிறப்புரிமைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதடினப்படையில், ரவி கருணாநாயக்க வெளிவிவகார அமைச்சுக்கு நியமித்த பணியாளர்கள் நீக்கப்பட மாட்டார்கள்.
ஒரு அமைச்சருக்கு இரண்டு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால், ஒரு அமைச்சுக்கான பணியாளர்களை நியமிக்க முடியும் என்பதால், ரவி கருணாநாயக்க நியமித்த பணியாளர்கள் நீக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
வெளிவிவகார அமைச்சுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள்.
இதனை தவிர ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.







