ரசிகர்களின் தூக்கத்தை கலைத்த ‘மெர்சல்’

விஜய், அட்லி கூட்டணியில் உருவாகி, வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20 அன்று வெளியாகிறது. இந்நிலையில் ரசிகர்களைக் கவர படத்தின் சிங்கள் ட்ராக் பாடல் ஒன்றை இன்று மாலை வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதால், ‘மெர்சல்’ பாடல்கள் எப்படியிருக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது.

viay

சிங்கிள் டிராக்கை வெளியிடுவதற்கு முன்பே, அப்பாடலின் டீசரை முன்னதாக நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் தூக்கத்தை கலைத்துள்ளது தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம். ‘ஆளப்போறான் தமிழன்…’ என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடல், படத்தில் விஜய்யின் அறிமுக பாடலாக இருக்கலாம். ‘மெர்சல்’ படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.