காருக்குள் சிறுவன் சடலமாக மீட்பு !

அக்கறைப்பற்று – ஒலுவில் பிரதேசத்தில் ஐந்து வயதான சிறுவன் ஒருவன் சிற்றூர்தியொன்றினுள் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

images (3)

இந்த சிறுவன் அருகில் உள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்றுள்ளதுடன், நீண்ட நேரமாக வீடு திரும்பாமை காரணமாக உறவினர்கள், பிரதேசவாசிகளுடன் இணைந்து அவரை தேடியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது வீட்டுக்கு அருகில் இருந்த சிற்றூர்தியொன்றில் குறித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், நேற்று மீட்கப்பட்டுள்ளான்.

இந்த சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்திகுள் சென்று கதவுகளை பூட்டியுள்ள நிலையில், முச்சு திணறல் ஏற்பட்டு இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.