பொலிசாருடன் தகராறில் ஈடுபட்ட யாழ் இளைஞர்கள் கைது

குருநகர் ஆலடி பகுதியில் பொலிஸாருடன் தகராற்றில் ஈடுபட்ட 8 பேர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

police

யாழ்ப்பாணம் குருநகர் ஆலடி பகுதியில் இன்று நண்பகல் 2 மணியளவில், இளைஞர் குழுவினர் நின்றுள்ளனர்.

அந்த வழியாக பொலிஸார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது பொலிஸார் குறித்த இளைஞர்களிடம் விசாரணை செய்த போது பொலிஸாருடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இடத்தில் இருந்து சென்ற பொலிஸார் சற்று நேரத்தின் பின்னர் அவ்விடத்துக்கு வந்து தகராற்றில் ஈடுபட்ட இளைஞர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.