கொக்குவில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது..!

யாழ்.கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இரண்டு பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு இளைஞன் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest_07

கொக்குவில் அம்பால் வீதியை சேர்ந்த 24 வயதான புஸ்பராஜா தக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள் வெட்டை மேற்கொண்ட இளைஞர்கள் தக்ஸனின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியே தப்பியதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவத்திற்கும் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிஸ்மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.