சிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்

சிறிலங்கா இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

Major-General-Dampath-Fernando

இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த அண்மையில் ஓய்வு பெற்றதை அடுத்து, நேற்று முதல் இந்தப் பதவிக்கு மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கெமுனு வோச் படைப்பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரியாகவும் உள்ள மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, இதற்கு முன்னர் முல்லைத்தீவு படைகளின் தலைமையக தளபதியாக பணியாற்றினார்.

இவர் 1983ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்டு, 1984ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டாவது லெப்டினன்ட் தர அதிகாரியாக இராணுவத்தில் பணியாற்றத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.