நீண்ட இடைவெளிக்கு பின்னர் யாழில் நடைபெறவுள்ள தமிழ் மொழிக்கான நிகழ்வு !

நீண்ட ஒரு இடைவேளைக்கு பின்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வுகளை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிகரமான ஒரு நிகழ்வாக மாற்றி அமைக்க வேண்டும்.

எமது தமிழ் மொழிக்கான ஒரு விழாவாகவும் இதனை நான் கருதுகின்றேன். எனவே அனைவருடைய ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

t2

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை என்னுடைய இராஜாங்க அமைச்சும், வட மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14,15 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.

t2

இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும், தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார ஊர்வலமும் இந்திய கலைஞர்களின் மேடை நிகழ்வுகளும் இந்திய இலக்கிய சொற்பொழிவாளர்களினதும் எமது நாட்டின் இலக்கிய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் தேசிய தமிழ் மொழித் தின விழா மலையகத்தின் தலைநகரான கண்டியில் இடம்பெற்றதாக என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலளார் இரவீந்திரன், கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவின் உதவி பணிப்பாளர் சடகோபன், கல்வி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ரி.ஸ்ரீசங்கர் வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து னொண்டுள்ளனர்.