உமா ஓயா திட்டம் பற்றிய நோர்வே நிபுணர்களின் அறிக்கை

உமா ஓயா திட்டத்தில் பாரிய கசிவு பிரச்சினைகள் இருப்பதை நோர்வேயின் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

um

முன்னதாகவே ஆய்வு செய்யப்பட்டிருந்தால், திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்களுக்குள் நீர் செல்வதை தடுத்திருக்க முடியும்.

அத்துடன், நீர் நிலைகளில் நீர் வற்றிப்போவதையும் தடுத்திருக்கமுடியும் என்றும் நோர்வே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உமா ஓயா திட்டத்தினால் பண்டாரவளை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிவதற்கும் அதனை நிவர்த்திப்பதற்கும் நோர்வே நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் அழைத்திருந்தது இதற்கமைய இலங்கை வந்த நோர்வேயின் குழு தமது ஆராய்வின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் இன்று சமர்ப்பித்துள்ளது.

அதில், உமா ஒயா திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாரிய இயந்திரங்கள், உரிய தன்மைகளை கொண்டிருக்கவில்லை.

இதன்காரணமாக சுரங்கப்பாதைக்குள் நீர் கசிவதை தடுக்கப்பதற்காக அதன் சுவர்களை உரிய வகையில் மெழுகிட முடிந்திருக்கவில்லை.

இதற்காக உரிய உறுதியான அடைப்பு பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை என்று நிபுணர் குழுவின் தலைவர் பென்ட் ஆகார்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிகளவான நீர் சுரங்கத்துக்குள் வருதை தடுக்க ஒப்பந்தக்காரர்கள் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி, நீர் கசிவை முழுமையாக கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய வழிவகைளை ஆராய்ந்து அறிக்கை தருமாறு நோர்வே குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.