7, 16, 25 ஆம் திகதிகளில் பிறந்தோருக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017

27.7.2017 முதல் 13.2.2019 வரை

7

ஏழாம் எண்ணில் பிறந்த நீங்கள் கேதுவை நாயகனாகக் கொண்டவர்கள். சர்வ ஞானமும், கல்வியும், நளினமும், நல்வார்த்தைகளும், நற்செயலும், இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு ஆளாகும் குணமும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் அறிவுரையால் உயர்ந்தவர்கள் பலர். வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்டவர்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக் கொள்பவர். நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும். துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், ரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுபவர்கள். பலநேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச்சாதாரணமாகப் பெறுவீர்கள். மனம், ஞானத்தைத் தேடி அலையும். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பவர் நீங்கள்.

போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விஷயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வீர்கள். அமைதி, ஈகைகுணம், மனோபலம், நாட்டுப்பற்று உடைய நீங்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியால் மறைமுக எதிர்ப்புகள் மறையும்.வழக்குகள் முடிவிற்கு வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எந்த எதிர்ப்பையும் மீறி வெற்றி பெறுவீர்கள்.

கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல்நலத்தில் வயிற்று பாதிப்புகள், அஜீரணக் கோளாறு
ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. உற்றார், உறவினரால் வீண்பிரச்னைகளை சந்திப்பீர்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபவிசேஷ முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதினால் வீண்பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாராகத்தான்நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை.

புதிய கூட்டாளிகளால் தேவையற்ற மனசஞ்சலங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனமுடனிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணியில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். செய்யும் பணியில் இடையூறுகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானமுடனிருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் இடையூறுகள் உண்டாகும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்தாலும் எந்தவொரு காரியத்திலும் திருப்தி இருக்காது. உடன் பழகுபவர்களுடன்
எச்சரிக்கையுடனிருப்பது நல்லது.

பெண்கள் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் போகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன்மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வரவேண்டிய பணத்தொகைகளில் இழுபறி ஏற்பட்டாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. மாணவ, மாணவியருக்குக் கல்வியில் மந்தநிலை உண்டாகும். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடையலாம். தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்னைகளுக்கு ஆளாவீர்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனம் தேவை. பொழுதுபோக்குகளாலும் கல்வியில் நாட்டம் குறையும். உடல்நலத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றியபடியே இருக்கும். மனக்குழப்பம், நிம்மதிக்குறைவு உண்டாகும். குடும்பத்தாரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

பரிகாரம்:

தினமும் விநாயகரை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ஸ்ரீவிநாயகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

அறுகம்புல்லை தினமும் விநாயகருக்கு சாத்தி வணங்கவும்.

சிறப்பான கிழமைகள்:

ஞாயிறு, வியாழன்.

அனுகூலமான திசைகள்:

தெற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 3, 7.