இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (வியாழக்கிழமை) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

cri

இப்போட்டியில் இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமைதாங்கவுள்ளனர்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

சொந்த மைதானத்தில் இலங்கை அணி தோல்வியடைந்திருப்பதால் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஆகையால் இப்போட்டியில் வெற்றிபெற்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அணி பாடுபடும்.

அதேபோல பலம்பொருந்திய அணியாக கருதப்படும் இந்திய அணி, இதற்கு வழிவிடுமா என்பது சந்தேகமே!