வெளிநாட்டிலிருந்து வந்தவர் விமான நிலையத்தில் மரணம் !!

வெளிநாடு நாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.

katu

தெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-282 என்ற விமானத்தில் குறித்த நபர் இன்று அதிகாலை 4.20 மணியளவில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

எப்படியிருப்பினும் அந்த நபரின் மரணத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.