மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

YAANAI

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38 ஆம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய நாகமணி இராசதுரை என்பவரே காட்டு யானை தாக்கியதில் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

38 ஆம் கிராமத்தில் தமது கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ள போதே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.