‘அபகலிப்டா’ பட பாணியில் உருவாகும் ‘ஆறாம் வேற்றுமை’

abakalipda

‘செவன்த் சேனல் மூவீஸ் மேக்கர்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் படம் ‘ஆறாம் வேற்றுமை’. இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் ‘யோகி’ பாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், ‘பரதேசி’ பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஹரிகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். அவர் படம் குறித்து பேசும்போது,

‘‘இந்த படம் இன்றைய காலகட்டத்தை பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களை பற்றி கதை நகர்வதால் ‘ஆறாம் வேற்றுமை’ என்று பெயர் வைத்தோம். தங்களுக்கென்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம். இந்த படத்தில் நமக்கு அறிமுகமான மொழியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களை பற்றிய படம் இது. சுருக்கமாக சொல்வதென்றால் ஹாலிவுட்டில் தயாராகி பெரும் வெற்றிப்பெற்ற ‘அபகலிப்டா’ போன்ற ஒரு படம் ‘ஆறாம் வேற்றுமை’’ என்றார்.

அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் இந்த படத்திற்கு ‘ரேனிகுண்டா’ படப் புகழ் கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.